Powered by Blogger.

Ennakenave nee: 18 Vayasu Song Lyrics

Ennakenave nee: 18 Vayasu Song Lyrics

எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே
கனவும் என் கண்ணில் தோன்றும் விவரம் அறிகின்றேனே
விழியில் விண்மீன்கள் பூக்கும் புதுமை உணர்கின்றேனே
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்
எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே

மழைவரும் போதே நனைவதே பாவம் என நினைப்பேன் முன்னாலே
குடையிருந்தாலும் நனைந்திடும் ஆசை வருகிறதே உன்னாலே
எதனையும் நாடா இதயம் வாழ்ந்தது தாளாக
உன்னையதில் நீயும் வரைந்தாயே ஓவியமாக
என்கால் இரண்டும் நீ கை காட்டும் ஊரோடு நடை பயில
அட மே மே சுகம் நானே
என்கால் இரண்டும் நீ கை காட்டும் ஊரோடு நடை பயில
அட மே மே சுகம் நானே
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்
எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே


அழுதிடத்தானே விழியென நானும் அறிந்திருந்தேன் முன்னாலே
அழகிய பூவை ரசித்திடக் கூட முடிகிறதே என்னாலே
சுவடுகள் ஏதும் பதியா பூமியில் நான் வாழ
துணைவர ஆசி கொடுத்தயே தேவதை போல
என் தாயன்பு நீதான் என்று நான் காதலுடன் கரைய
அலை போலே வரும் நாளே ஓ ஓ ஓ
என் தாயன்பு நீதான் என்று நான் காதலுடன் கரைய
அலை போலே வரும் நாளே
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்

Ennakenave nee

எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே
கனவும் என் கண்ணில் தோன்றும் விவரம் அறிகின்றேனே
விழியில் விண்மீன்கள் பூக்கும் புதுமை உணர்கின்றேனே
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்


18 Vayasu Song Lyrics list

Aanum Illa

Enakkenave Nee

Entha Ulagil

Podi Podi Pennae

Unnai Onru