Powered by Blogger.

Sigaram Thodu :- ANBULLA APPA

அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை மண் மேலே

அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
எனக்கு எது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம் நீ தானே உண்மையிலே

அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை மண் மேலே

மாதக்கணக்கில் தாயும் சுமந்து
வந்தது தான் இவனது உயிரே
காலம் முழுக்க என்னை சுமந்து
காத்து நிற்க்கும் உனக்கு இல்லை நிகரே
தூசி என்னை தொடவும் விட மாட்டாய்
தோளில் எனை சுமந்தே நடை போட்டாய்
வந்தாயே நீ என் வரமாய்

அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே

தோழன் என நீ தோழும் கொடுத்து
தோல்விகளை ஜெயித்திட வருவாய்
சோகம் எதையும் உன்னுள் மறைத்து
புன்னகையே எனக்கென தருவாய்
கண் இமையில் என்னை நீ அடைக்காது
தூங்கிடவும் மறப்பாய் என்னை பார்த்து
வாழ்வாயே நீ என் நிழலாய்

அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே

எனக்கு எது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம் நீ தானே உண்மையிலே

No comments:

Post a Comment